;
Athirady Tamil News

1 மணிநேரம் மேல் வராத ஆம்புலன்ஸ் – வலியில் துடிதுடித்த பெண் உயிரிழப்பு!

0

ஆம்புலன்ஸ் வராததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துடிதுடித்த பெண்
நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி (43 வயது) என்ற பெண்ணுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, அவருக்கு நெஞ்சுவலி பற்றும் மூச்சுத்திணறல் அதிகரித்து கொண்டே இருந்ததால் உடனேயே அவரை பந்தலூர் பொதுமருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அதிர்ச்சி சம்பவம்
இந்நிலையில், வழியால் துடித்துக்கொண்டு இருந்த வேளாங்கண்ணியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகியும் வராததால் அப்பெண் உயிரிழந்தார்.

இதனையடுத்து, மருத்துவமனையில் உள்ள ஊழியர்களிடம், பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.