;
Athirady Tamil News

வெடுக்குநாறிமலை போராட்டம்! மனித உரிமைகள் காரியாலயத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்

0

வெடுக்குநாறிமலை விவகாரத்திற்கு நீதி கோரி வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

எனினும் ஆணைக்குழுவில் நிறைவேற்று அதிகாரிகள் எவரும் கடமையில் இருக்கவில்லை. கடமையில் இருந்த அலுவலர்களும் மக்களுடன் கலந்துரையாடுவதை தவிர்த்தனர்.

காரியாலயத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்
இதனையடுத்து ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஒரு மணிநேரத்தின் பின்னர் அலுவலர்கள் வருகைதந்து பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியதுடன், நாளையதினம் சிறைச்சாலைக்கு சென்று தடுப்பில் உள்ளவர்களை நேரடியாக பார்வையிடுவதாக உறுதியளித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.