;
Athirady Tamil News

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

0

வெலிகம – உயன்கந்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (16.03.2024) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 38 வயதான மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
உயிரிழந்தவரும், சந்தேகநபரும் இரண்டு சுற்றுலா விடுதிகளை நடத்தி வரும் நிலையில் இரு சுற்றுலா விடுதிகளுக்கும் அண்டிய கடற்கரைக்கு அருகிலுள்ள மரத்தை வெட்டியதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த நபரை தாக்கியுள்ளனர்.

அப்போது, ​​சந்தேகநபர் மற்றைய நபர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.