;
Athirady Tamil News

தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ள வைக்கும் வகையில் கருத்து கூறினார் என லலீசன் மீது குற்றச்சாட்டு

0

கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபர் ச. லலீசனுக்கு எதிராக புலனாய்வு துறையினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற ” தமிழ் வேள்வி – 2023″ என்ற நிகழ்வில் , “ஈழ தமிழ் சமுதாயத்தில் தற்போது இளைஞர் அமைப்புக்களின் எழுச்சி , அவசியமானதா ? அவசியமற்றதா ?” எனும் தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றத்தில் நடுவராக லலீசன் கலந்து கொண்டிருந்தார்.

அதன் போது , தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ள தூண்டும் வகையில் கருத்துக்களை தெரிவித்ததாகவும் , இன நல்லிணக்கத்தை குழப்பும் வகையிலான கருத்துக்களை தெரிவித்ததாக கல்வி அமைச்சுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் கல்வி அமைச்சின் ஒழுக்காற்று பிரிவுக்கான மேலதிக செயலர் , சீ. சமந்தி வீரசிங்க , கல்வி அமைச்சின் ஆசியர் பயிற்சி கல்வி பிரிவின் பணிப்பாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டு , நடவடிக்கை எடுக்குமாறும் , எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தனக்கு விளக்கமான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

கல்வி அமைச்சுக்கு குறித்த முறைப்பாட்டை புலனாய்வு பிரிவினரே வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பட்டிமன்றில் கூறப்பட்ட கருத்தை முறைப்பாடாக வழங்கிய போது , அதனை ஏற்று விசாரணைகளை முன்னெடுப்பது , கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மோசமான செயற்பாடு என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.