;
Athirady Tamil News

வடக்கில் கடந்தாண்டு மாத்திரம் ரூ.18 கோடி காசோலை மோசடி

0

வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு காசோலை மோசடி தொடர்பாக 79 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முறைப்பாடுகளின் அடிப்படையில் 34 பேர் சந்தேகத்தில் கைதாகியுள்ளனர். மொத்தமாக 18 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக் கைக்கு, வடக்கு மாகாண மூத்த பொலிஸ்மா அதிபர் மஹிந்த குண ரத்ன வழங்கியுள்ள பதிலின் அடிப்படையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. பொலிஸ் பிராந்தியங்கள் ரீதியாக இந்த மோசடிகள், முறைப்பாடுகள், நடவடிக்கைகள் குறித்த விவரம் வருமாறு:

யாழ்ப்பாணம்
முறைப்பாடுகள் – 3
மோசடி – 36 இலட்சம் ரூபா
கைது – ஒருவர்

காங்கேசன்துறை
முறைப்பாடுகள் – 3
மோசடி – 40 இலட்சம் ரூபா
கைது – இருவர்

மன்னார்
முறைப்பாடுகள் – 11
மோசடி – 380 இலட்சம் ரூபா
கைது – இருவர்

வவுனியா
முறைப்பாடுகள் – 45
மோசடி – 790 இலட்சம் ரூபா
கைது -18 பேர்

முல்லைத்தீவு
முறைப்பாடுகள் -6
மோசடி – 269 இலட்சம் ரூபா
கைது – ஒருவர்

கிளிநொச்சி
முறைப்பாடுகள் – 11
மோசடி -281 இலட்சம் ரூபா
கைது – 10 பேர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.