;
Athirady Tamil News

கொலம்பியாவில் கைப்பற்றப்பட்ட பல கோடி டொலர் பெறுமதியான போதைப்பொருள்

0

கொலம்பியாவின் நடுக்கடலில் அதிவேக படகை துரத்திச் சென்று 4 தொன் எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வருடம் கரீபியன் கடலில் கைப்பற்றிய மிகப் பெரிய தொகை கொண்ட கொக்கைன் போதைப் பொருள் இதுவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட குறித்த போதைப்பொருளின் பெறுமதி 11 கோடியே 30 இலட்சம் அமெரிக்க டொலர்களாகும்.

போதைப்பொருள் கைப்பற்றல்
கொலம்பிய கடற்படை, கொலம்பிய விமானப்படை மற்றும் அமெரிக்காவின் தெற்கு கட்டளையின் கூட்டு இடைநிலை பணிக்குழு ஆகியன இணைந்து சுற்றிவளைப்பு மேற்கொண்டன.

இந்த நிலையில் சான் ஆண்ட்ரேஸ் இஸ்லாவுக்கு அருகில் படகில் கடத்திச் செல்லப்பட்ட கொக்கைன் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக கொலம்பிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மூவர் கைது
மற்றொரு படகில் கொலம்பிய இராணுவத்தினர் மின்னல் வேகத்தில் துரத்திச் சென்று அந்தப் படகை பிடித்து போதைப் பொருளை கைப்பற்றிய காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கொலம்பிய பிரஜைகள் மூவரும், ஹோண்டுராஸ் பிரஜை ஒருவரும் மற்றும் வெனிசுலா பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகில் காணப்படும் கொக்கைன் போதைப்பொருளில் 60 சதவீதமானவை கொலம்பியாவில் உற்பத்தி செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.