;
Athirady Tamil News

வெள்ளவத்தை பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

0

கரையோரப் பாதையில் தொடருந்துகளை இன்று (29.3.2024) முதல் 31 ஆம் திகதி வரை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ளது.

பராமரிப்பு நடவடிக்கை
வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும் இடையே இயங்கும் தொடருந்துகள் ஒரு வழிப் போக்குவரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி தொடருந்து நிலையங்களுக்கு இடையில் குழாய் ஒன்றின் பராமரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவுக்குப் பின்னர் தொடருந்து சேவை வழமைக்குத் திரும்பும் என தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.