;
Athirady Tamil News

கல்லூரி மாணவர் Bank Account -ல் திடீரென ரூ.46 கோடி Transaction! பார்த்தவுடன் அவர் செய்தது என்ன?

0

கல்லூரி மாணவரின் பான் எண்ணை தவறாக பயன்படுத்தி அவரது வங்கிக் கணக்கில் ரூ.46 கோடி பரிவர்த்தனை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.46 கோடி பணப் பரிமாற்றம்
இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரமோத் குமார் தண்டோடியா.

இவருடைய PAN Number மூலம் மும்பை மற்றும் டெல்லியில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவருடைய வங்கிக்கணக்கில் ரூ.46 கோடி பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்று பிரமோத் குமாருக்கு நோட்டீஸ் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக வருமான வரித் துறை தொடர்புடைய அலுவலர்களிடம் விசாரித்துள்ளார்.

அப்போது தான் பிரமோத் குமாரின் பான் எண், மேற்கூறியுள்ள நிறுவனத்தின் பான் எண்ணாக சேர்க்கப்பட்டு பணப் பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

முறைகேடாக பயன்படுத்திய நிறுவனம்
பின்னர், இதுகுறித்து பொலிஸில் புகார் அளிக்க பிரேம் குமார் முயன்றுள்ளார். ஆனால், அவரது புகாரை ஏற்காமல் உள்ளூர் காவல் துறையினர் அலைக்கழித்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால், நேற்று குவாலியர் கூடுதல் பொலிஸ் சூப்பிரண்டு (ஏஎஸ்பி) அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஏஎஸ்பி கூறுகையில், “கல்லூரி மாணவர் வங்கிக் கணக்கில் முறைகேடாக ரூ.46 கோடி பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக புகார் வந்தது.

அதை ஆய்வு செய்ததில் ஒரு நிறுவனம் இவரது பான் எண்ணை தவறாக பயன்படுத்தி பணப்பரிவர்ததனை செய்துள்ளது. நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.