;
Athirady Tamil News

கொழும்பு அரசியலில் பரபரப்பு… மஹிந்தவுடன் இணையும் சஜித் கட்சியின் முக்கிய உறுப்பினர்!

0

இலங்கையில் அரசியல் மாற்றம் ஒன்றிற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வதற்கு தயாராகவுள்ளார்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவுடன் கருத்துகளை பரிமாறிக் கொண்டுள்ளார்.

இதேவேளை, புத்தாண்டுக்கு முன்னதாக பொதுக்கூட்டம் ஒன்றில் பெரமுனவுடன் இணைய அவர் முடிவு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

அதிபர் தேர்தலில் கோட்டாபயவை முன்னிறுத்தியதால் தான் பொதுஜன பெரமுனவுடன் மனமுடைந்து போயிருந்ததாகவும், தற்போது எந்தத் தடையும் இல்லாததால், பொதுஜன பெரமுனவில் இணைவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.