;
Athirady Tamil News

ஜூலை, ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு

0

எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பான வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஜூலை மாதத்தில் வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.