;
Athirady Tamil News

தொடரும் போர் பதற்றம்: உக்ரைனின் எரிசக்தி மையங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

0

ரஷ்யா, உக்ரைனின் எரிசக்தி மையங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

அதன்போது, மேற்குப் பிராந்தியமான லிவீவில் க்ரூஸ் வகை ஏவுகணை மூலம் ரஷ்யா நேற்றையதினம் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அதில் ஒருகட்டடம் தரைமட்டமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்தோடு, தாக்குதலினால்19 வயது இளைஞா் ஒருவர் உயரிழந்துள்ளதுடன், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

போர் ஆரம்பம்
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022 பெப்ரவரி மாதம் படையெடுத்தது.

மேலும், அதற்குப் பதிலடியாக ரஷ்யாவிலும், ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளிலும் உக்ரைன் பதில் தாக்குதல் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.