;
Athirady Tamil News

Social Media மூலம் உருவான காதல்! 34 வயது பெண்ணை கரம்பிடித்த 80 வயது முதியவர்

0

சமூக வலைதளம் மூலம் உருவான காதலால் 34 வயது பெண்ணை 80 வயது முதியவர் திருமணம் செய்துள்ளார்.

தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருப்பதில்லை. சில நேரங்களில் ஸ்மார்ட்போன் தான் நம்மை பயன்படுத்துகிறது என்றே சொல்லலாம்.

குறிப்பாக, சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. அதன்மூலம் ஏற்பட்ட காதலால் நடைபெற்ற திருமணம் தான் தற்போது பேசப்பட்டு வருகிறது.

எங்கு நடந்தது?
இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், அகர் மாவட்டத்தின் மகாரியா கிராமத்தை சேர்ந்த 80 வயதான முதியவர் பலுராம் பக்கிரி. அதேபோல, மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த 34 வயதான பெண் ஷீலா இங்கிள்.

இவர்கள் இருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

பின்பு, இருவரும் திருமண வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதன்படி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுடைய திருமணம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. தற்போது, திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.