;
Athirady Tamil News

இணுவில் புகையிரத கடவை சமிக்ஞை விளக்கு கட்டமைப்பை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

0

இணுவில் புகையிரத கடவையின் சமிக்ஞை விளக்கு கட்டமைப்பை சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்துவைத்தார்.

முன்பதாக கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞர் ஒருவரும் அவரது கைக்குழந்தையும் பலியானதை தொடர்ந்து குறித்த பிரதேச பொதுமக்களால் புகையிரத கடவையில் நடத்தப்பட்ட பாரிய எதிர்ப்பு போராட்டத்தை அடுத்து குறித்த பகுதிக்கு உடன் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுடன் கலந்துரையாடி பாதுகாப்பற்ற புகையிரத கடவை விவகாரத்திற்கு உடனடி தீர்வாகவும் நிரந்தர தீர்வாக ஒளி சமிஞ்சை விளக்கு பொருத்துவதாக வழங்கிய உறுதிப்பாட்டிற்கு அமைய சுமார் 80 இலட்சம் செலவில் ரயில்வே திணைக்களத்தினால் பொருத்தப்பட்ட சமிக்ஞை விளக்கு சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.