;
Athirady Tamil News

பொது இடங்களில் ரகசியமாக காதலை வெளிப்படுத்தும் வில்லியம் கேட் தம்பதியர்

0

தன் காதல் மனைவி இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் என்றதும் இளவரசர் வில்லியம் எவ்வளவு துடிதுடித்துப்போனார் என்பது உலகத்துக்கே தெரியும்.

கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, வில்லியம் கேட் தொடர்பான செய்திகள் பல தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளன.

பொது இடங்களில் ரகசியமாக காதலை வெளிப்படுத்தும் வில்லியம் கேட்
அவ்வகையில், வில்லியம் கேட் தம்பதியர், பொது இடங்களில் தங்களுக்கிடையிலான காதலை ரகசியமாக வெளிப்படுத்துவதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

வில்லியம் கேட்டுக்கிடையிலான காதல், 2004ஆம் ஆண்டு உறுதியானது. சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாடச் சென்றபோது தம்பதியர் மகிழ்ச்சியுடன் அளவளாவும் காட்சிகள் வெளியாகியிருந்தன.

அதேபோல, திருமணத்தன்று பொதுவாக சீரியஸாக முகத்தை வைத்துக்கொள்ளும் தம்பதியரைபோல இராமல் வில்லியமும் கேட்டும் புன்னகையுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொளும் புகைப்படமும் கவனம் ஈர்த்தது.

இப்போது தம்பதியர் காதலிக்கத் துவங்கி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. பொறுப்புகள் அதிகரித்தாலும், இன்னமும் அந்தக் காதல் குறைந்தாற்போலில்லை.

பொது இடங்களிலும், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைப்பதும், கைகளை அன்புடன் பற்றிக்கொள்வதுமாக இன்னமும் தங்கள் அன்பை வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது வில்லியம் கேட் ஜோடி.

அதற்கு ஆதாரமாக பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் சில இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.