கிளிநொச்சியில் நடந்த அசம்பாவிதம்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்! பரபரப்பு காட்சி
கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது பெண்ணொருவர் தவறி விழுந்த நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இச்சம்பவம் நேற்றையதினம் (04-04-2024) கரடி போக்கு சந்தியில் குறித்த பெண் வேலைக்காக சென்ற போது ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அரச பேருந்தில் பயணித்த குறித்த பெண் தரிப்பிடத்தில் இறக்கியுள்ளார்.
இதன்போது, பெண் இறங்குவதை அவதானிக்காத சாரதி பயணிகளை ஏற்றிய பின்னர் பேருந்தை செலுத்தியுள்ளார்.
இதன்போது விழுந்த குறித்த பெண் சிறு காயங்களிற்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.