;
Athirady Tamil News

மட்டக்களப்பில் விவசாய காணியிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

0

மட்டக்களப்பு (Batticaloa) வாகரை பிரதேசத்தில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வெடிபொருட்களானது இன்று (05.04.2024) காலை ஊரியன் கட்டு கிராம சேவகர் பிரிவின் பெரிய தட்டுமுனையில் உள்ள விவசாய காணியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகள்
விவசாய காணியில் பயிர் செய்கை நடவடிக்கைக்காக நீர் குழாய் பொருத்தும் முகமாக குழியொன்றினை வெட்டிய போது பொலித்தீன் பையில் மறைத்து வைக்கப்பட்டு சுற்றப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளது.

இதன்போது சம்பவம் தொடர்பாக உடனடியாக அருகில் உள்ள 233ஆவது வாகரை இராணுவப் படைப் பிரிவிலுள்ள இராணுவ புலனாய்வாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானித்தன் பின்னர் கதிரவெளி விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்புடன் அவற்றினை மீட்டு வாகரை பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்நடவடிக்கையின் போது 81 மோட்டார் துப்பாக்கி அதற்கு பொருத்தும் பரல்-1, பை போட்-1, வேஸ் பிளேட்-1 ஆகியவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.