;
Athirady Tamil News

கணவர் இறந்த அன்றே தூக்கிட்டு உயிரைவிட்ட 40 வயது மனைவி

0

தமிழக மாவட்டம் கடலூரில், கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் சூரியன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கந்தன் (48). இவர் உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அன்றைய தினம் மாலை அவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.

கணவரின் இறப்பினால் அவரது மனைவி ரமாவள்ளி கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் அவர் வீட்டின் கழிவறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை கவனித்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

பொலிஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.