;
Athirady Tamil News

அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்த முக்கிய அரசியல்வாதி!

0

நாட்டில் நடைபெறவுள்ள எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் தீவிர அரசியலில் இருந்து விலகவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பல இடையூறுகளுக்கு மத்தியில் அரசியலில் பிரவேசித்த தமது நோக்கம் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை இயன்றவரை உயர்த்துவதே எனவும் அதற்காக இயன்றளவு சேவைகளை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள தமிழ் மக்களைக் கேடயமாகப் பாவித்து அரசியலில் ஈடுபட தமக்கு விருப்பம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலிலேயே அரசியலிலிருந்து விலகுவதாக இருந்தேன், தான் தொடங்கிய திட்டங்களால் அந்தத் தேர்தலில் போட்டியிட்டதாகவும் அவர் கூறினார்.

தற்போது வயோதிபமாக உள்ளதால், உடல் பலவீனமாக இருப்பதாக கருதுவதால், எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.