;
Athirady Tamil News

ஜம்மு-காஷ்மீரில் 2 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!

0

ஜம்மு-காஷ்மீரின் சோனாமார்க், பஹல்காம் மலைப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் இருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர்.

கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க் மலைப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் தங்கியிருந்த அமெரிக்க சுற்றுலாப்பயணி லானா மேரி உடல்நலக் குறைவு காரணமாக

சோனாமார்க்கில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குஜராத்தில் 63 வயதான சுற்றுலாப் பயணி அனகா, பஹல்காம் சுற்றுலா விடுதியில் உள்ள உணவகத்தில் மயங்கிவிழுந்தார். அதன்பின்னர் அனகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, போலீஸார் அவர்கள் இருவரின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.