;
Athirady Tamil News

கனடாவில் 24 வயது இந்திய மாணவர் காரில் சுட்டுக் கொலை: நீடிக்கும் மர்மம்!

0

கனடா துப்பாக்கி சூடு சம்பவத்தில் 24 வயது இந்திய மாணவர் சிராக் அன்டில் காரில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாணவருக்கு ஏற்பட்ட பரிதாபம்
கனடாவின் வான்கூவரில் (Vancouver) 24 வயதான இந்திய மாணவர் ஒருவர் கார் ஒன்றின் உள்ளே சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிராக் அன்டில்(Chirag Antil) என்ற அடையாளம் காணப்பட்ட உயிரிழந்த மாணவர் ஹரியானாவைச் சேர்ந்தவர்.

அவரது உடல் ஏப்ரல் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தெற்கு வான்கூவரில் உள்ள கிழக்கு 55வது அவென்யூ, மெயின் தெருவில் ஒரு காரில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய சமூகத்தினர் மத்தியில் அதிர்ச்சி
காவல்துறை தகவல்களின்படி, கொலை செய்யப்பட்ட சந்தேக நபர் அல்லது கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சிராக் அன்டில் மரண செய்தி, கனடாவில் உள்ள இந்திய சமூகத்தினர் மற்றும் இந்தியாவிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை (MEA) சிராக் அந்திலின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அவர்களுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.