;
Athirady Tamil News

காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய காதலன் உயிர்மாய்ப்பு!

0

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் வெட்டித் தாக்கி விட்டு காதலன் உயிர்மாய்த்துள்ளார்.

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிப்புலத்தில் வசித்து வந்த குணத்திலகம் பிரணவன்(வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்;

குறித்த நபர் இன்று செவ்வாய்க்கிழமை(16) அதிகாலை 4மணியளவில் யுவதியின் வீட்டுக்குள் நுழைந்து யுவதி மீதும் அவரது தாயார் மீதும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று வெற்றுக் காணி ஒன்றில் உயிர்மாய்த்துள்ளளார்.

இந்நிலையில் யுவதியும் யுவதியின் தாயாரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.