;
Athirady Tamil News

பிரான்ஸ் பள்ளிக்கு வெளியில் நடந்த கத்திக்குத்து! மாரடைப்பில் பலியான 14 வய்து மாணவி

0

பிரான்ஸ் பள்ளிக்கூடத்தின் அருகே நடந்த கத்திக் குத்து சம்பவத்திற்கு பிறகு, பிரான்ஸ் பள்ளி சிறுமி ஒருவர் இதய செயலிழப்பால் உயிரிழந்துள்ளார்.

பதட்டமான முற்றுகை
கிழக்கு பிரான்சில் உள்ள Souffelweyersheim கிராமத்திற்கு அருகில் இந்த வாரம் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்தது.

அந்த பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு வெளியே 7 மற்றும் 11 வயதான இரு சிறுமிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலைத் தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அருகில் இருந்த மத்திய பள்ளி(middle school) முடக்கப்பட்டது. இந்த முற்றுகையின் போது, 14 வயதான ஒரு பெண் மாணவி மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இதய செயலிழப்பால் உயிரிழந்தார்.

விரைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் அவசர கால சேவைகளை அழைத்திருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக அவளை காப்பாற்ற முடியவில்லை.

கல்வி அதிகாரி Olivier Faron தெரிவித்த தகவலில், பள்ளி முடக்கப்பட்ட சமயத்தில் 14 வயதான பெண் குழந்தை இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டார். “அவளை விரைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீட்டு அவசர கால சேவைகளை அழைத்தனர்,” என்று பாரோன் கூறினார். ” துரதிர்ஷ்டவசமாக, அந்த மதியம் அவள் இறந்துவிட்டாள்.”

பெண்ணின் பெயரை அதிகாரிகள் வெளியிடவில்லை. தாக்கப்பட்ட இரண்டு இளைய பெண்களின் நிலை தெரியவில்லை, ஆனால் அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சோகத்தில் ஆழ்ந்த சமூகம்
மாணவியின் இறப்பு உள்ளூர் சமூகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி முடக்கத்தின் போது மாணவர்கள் அனுபவித்த அதிர்ச்சியையும் பயத்தையும் பெற்றோர்கள் பகிர்ந்து கொண்டனர்.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆதரவு சேவைகளை வழங்குவதாக பள்ளி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. கத்திக்குத்து தாக்குதலுக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.