;
Athirady Tamil News

திருகோணமலையில் விபத்து: பாடசாலை மாணவி படுகாயம்

0

திருகோணமலை (Trincomalee) தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜவரோதயம் வீதியில் இடம் பெற்ற விபத்தில் 15 வயது பாடசாலை மாணவி படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்றையதினம் (23.04.2024) குறித்த மாணவி வீதியை கடக்க முற்பட்ட போது வான் ஒன்று மோதியதால் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து, சம்பவம் தொடர்பாக கண்டியை (Kandy) சேர்ந்த 32 வயதுடைய வான் சாரதி திருகோணமலை தலைமையகப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் விசாரணை
அத்துடன், விபத்தில் காயமடைந்த மாணவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.