கடைக்குள் புகுந்த அரச பேருந்து: அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து
கல்முனையிலிருந்து கொழும்பு(Kalmunai-Colombo) நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து ஒன்று செங்கலடி சந்தியில் பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், விபத்து காரணமாக காயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, விபத்து நடந்த இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பலத்த சேதம்
அதேவேளை, விபத்தினால் செங்கலடி பகுதியில் உள்ள கடையொன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மின்சார சபைக்கு சொந்தமான மின் கம்பங்களும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.