;
Athirady Tamil News

யாழில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு : 30 கிலோ கஞ்சா மீட்பு

0

யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி பகுதியில் 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது, நேற்றைய தினம் (05.05.2024) மருதங்கேணியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் போதைப்பொருள் பரிமாறிக் கொள்ளப்படுவதாக வவுனியா (Vavuniya) விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு திடீர் சோதனை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசேட நடவடிக்கைகள்
இதன்போது, போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ். கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த 36 மற்றும் 35 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த நபர்களிடமிருந்து 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர்கள் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவும் பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருடன் இணைந்து பல திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.