;
Athirady Tamil News

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2023 பெறுபேறுகள்: பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு!

0

இன்று (6) ஆரம்பமான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் (2023) பெறுபேறுகள் செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று (06) நடைபெற்றுள்ளது.

குறித்த பரீட்சை இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

2023 பெறுபேறுகள்
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,527 பரீட்சை நிலையங்களில் 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா (Jeewarani Punida) குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த பரீட்சைகளின் பெறுபேறுகள் செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.