;
Athirady Tamil News

ராஜ குடும்பப் பெண்கள் இருவரை நெருங்கவிடாமல் தள்ளிவைத்திருக்கும் இளவரசர் வில்லியம்

0

பிரித்தானியாவின் வருங்கால மன்னரான இளவரசர் வில்லியம், ராஜ குடும்பப் பெண்கள் இருவரை நெருங்கவிடாமல் தள்ளிவைத்திருப்பதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனிமையில் தவிக்கும் இளவரசர் வில்லியம்
பாட்டி மகாராணியார், தந்தை சார்லஸ், தம்பி ஹரி, அன்பு மனைவி கேட், ஆசைப்பிள்ளைகள் என மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்த இளவரசர் வில்லியம், தந்தைக்கும் மனைவிக்கும் புற்றுநோய் பாதிக்க, ஏற்கனவே தம்பி ஹரி விட்டுச் சென்றுவிட்ட நிலையில், தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் பக்கிங்காம் மாளிகையில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றிற்கு, வில்லியமுடைய சித்தப்பா பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி ஆகியோர் உட்பட இளைய தலைமுறையினர் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் வில்லியம் அளவளாவும் காட்சிகள் வெளியாகியிருந்தன.

ராஜ குடும்பப் பெண்கள் இருவரை தள்ளிவைத்திருக்கும் வில்லியம்

ஆனால், உண்மையில், இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி ஆகிய இருவரையும் இளவரசர் வில்லியம் சற்று தள்ளியே வைத்திருப்பதாகத் தெரிவிக்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Tom Quinn.

அதற்குக் காரணம், பீட்ரைஸ் மற்றும் யூஜீனி இருவருமே இளவரசர் ஹரிக்கு நெருக்கமானவர்கள். அவர்கள் ஹரியுடன் நெருக்கம் காட்டுவது அரண்மனை வட்டாரத்துக்கு, குறிப்பாக வில்லியம் கேட் தம்பதியருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. வில்லியமைப் பொருத்தவரை, ஹரியுடன் நெருக்கம் காட்டும் பீட்ரைசும் யூஜீனியும் தனக்கு உண்மையாக இருப்பார்களா என அவர் எண்ணுகிறார் என்று கூறும் Tom Quinn, ஆகவே அவர் அவர்களை சற்று தள்ளியே வைத்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.