;
Athirady Tamil News

1,524 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிய ரணில்

0

உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மகாவலி குடியிருப்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களில் 1,524 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வானது நேற்று (17) அம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் இம்பெற்றது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால்(Ranil Wickremesinghe) அவர்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

உறுமய தேசிய வேலைத்திட்டம்
மகாவலி குடியிருப்பில் இந்த வேலைத்திட்டத்திற்காக 45,253 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 2 மில்லியன் பேருக்கான காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.