;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1718909.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

ஒவ்வொரு நாளும் மக்கள் சிரிக்க வேண்டும் ; கட்டாய சட்டம் கொண்டு வந்த நாடு

0

ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, சிரிப்பதன் மூலம் இதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு ஒருமுறையாவது சிரிக்க வேண்டும்
இதனால் அம்மாகாணத்தில் வசிக்கும் மக்கள் நாளொன்றுக்கு ஒருமுறையாவது சிரிக்க வேண்டும் என்று கட்டாய சட்டமாக்கியுள்ளது. மேலும், மாதத்தின் 8ஆவது நாளை சிரிப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை இது குறித்த உத்தரவில்,” ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது சிரிப்பது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஆகவே, சிரிப்பின் நன்மைகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அதனை ஊக்குவிப்பதற்காகவும் இது சட்டமாக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.