;
Athirady Tamil News

சதொச வர்த்தக நிலையங்களை ஆயிரமாக அதிகரிக்க திட்டம்

0

நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கவும் நாடு முழுவதும் உள்ள சதொச வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக மற்றும் வணிக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் பொதுச் சந்தை வளாகத்திற்கு முன்பாக அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தை புதுப்பித்த பின்னர் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த 3 மாதங்களில் பொருட்களின் விலைகளை 17% குறைக்க அரசாங்கத்தால் முடிந்தது என்றார். “2025 ஆம் ஆண்டுக்குள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்காக 150க்கும் மேற்பட்ட சதொச வர்த்தக நிலையங்களை திறக்க நாங்கள் தயாராக உள்ளோம்.”

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் மையங்களாக சதொச வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

கடந்த மூன்று மாதங்களில் பொருட்களின் விலையை 17% குறைத்துள்ளோம். கடந்த மாதம் 40 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 8% குறைக்கப்பட்டுள்ளன.

“எனவே, பொருட்களின் விலைகளைக் குறைத்து, பொது மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதற்காக சதொச வலையமைப்பை விரிவுபடுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.