;
Athirady Tamil News

வெள்ளத்தில் மூழ்கிய அநுராதபுர நகரத்தின் பல இடங்கள்

0

அநுராதபுரத்தில் பெய்த கனமழை காரணமாக, அநுராதபுர நகரத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நீர்மட்டம் உயர்ந்து, நீர் நிரம்பி வழிந்ததால், ஜெய ஸ்ரீ மஹா போதி மாவத்தையில் அமைந்துள்ள சுற்றுலா பொலிஸ் நிலையம், தொல்பொருள் அலுவலகம், ஹோட்டல், பாடசாலை மற்றும் மல்வத்து ஓயா ஆகியவை நீரில் மூழ்கியுள்ளன.

மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கலா வாவி, நாச்சதுவ, கண்டி வாவி உள்ளிட்ட பெரிய குளங்களிலிருந்தும், பல சிறிய குளங்களிலிருந்தும் வெளியேறும் நீர் மல்வத்து ஓயாவில் தேங்கியுள்ளது.

இதன் காரணமாக அநுராதபுர நகரத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.