;
Athirady Tamil News

யானைக்கு பயந்து ஓடியவர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு

0

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை கிராமத்தில் யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் முதலைகுடாவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சோமசுந்தரம் சீராளசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மின்கம்பியில் சிக்குண்டு உயிரிழப்பு
குறித்த நபர் வயலுக்கு காவலுக்கு சென்றவேளை இன்று (03) அதிகாலை யானை துரத்தி சென்றுள்ளது.

இந்நிலையில் யானைக்கு பயந்து ஓடியதில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்குண்டு விவசாயி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை குறித்த பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தரால் கடந்த மார்கழி மாத்தில் ஒலிபெருக்கி மூலமும் கிராம கூட்டங்கள் ஊடாகவும் காட்டு யானை பாதுகாப்புக்காக சட்டவிரோத மின்சார வேலியினை அமைக்க வேண்டாம் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.