;
Athirady Tamil News

70 மில்லியன் ரூபா பெறுமதியான 5 வாகனங்கள் பறிமுதல்; சந்தேக நபர் மயக்கம்

0

கலவான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 70 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க ஐந்து மோட்டார் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் , “பொல்கொடுவே கடா” என்றழைக்கப்படும் செல்வந்த வாகன வர்த்தகர் ஒருவர் போலியான சேசிஸ் மற்றும் என்ஜின் எண்கள் உள்ளிட்ட மோசடியான ஆவணங்களுடன் வாகனங்களை விற்பனை செய்யும் சட்டவிரோத வியாபாரத்தை நடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது, ​​வாகனங்கள் சாதுர்யமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்த சுற்றிவளைப்பின் போது பீதியடைந்த சந்தேக நபர் மயக்கமடைந்து இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.