அருங்காட்சியகத்தில் கோடீஸ்வரர்களின் முகத்துடன் திரியும் நாய்கள்!
உலக கோடீஸ்வரர்களின் முகங்களின் மாதிரியைக் கொண்டு அமெரிக்க கலைஞர் நாய் ரோபோக்களை உருவாக்கியிருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தொழில்நுட்பம் மற்றும் கலாசாரத் துறையில் பிரபலம் வாய்ந்த அமெரிக்க கலைஞர் மைக் வின்கெல்மேன், தொழில்நுட்பகத் துறையில் கோடீஸ்வரர்களாக இருப்பவர்களின் முகங்களைக் கொண்ட ரோபோ நாய்களை உருவாக்கி கலைத் துறையில் கவனம் பெற்றுள்ளார்.
பெர்லின் கண்காட்சியில் எலான் மஸ்க், மார்க் ஸுக்கர்பெர்க், ஜெஃப் ஃபெசோஸ், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களான ஆண்டி வார்ஹோஸ், பாப்லோ பிகாசோ போன்றோரின் சிலிக்கான் தலைகளுடன் பொருத்தப்பட்டு, ரெகுலர் அனிமல்ஸ் என்ற பெயரில் கலைக்கூடத்தின் வெளியில் ஓய்வில்லாமல் திரியும்படியாக உலாவ விட்டுள்ளனர்.
ஒவ்வொரு ரோபோவிலும், அதன் சுற்றுப்புறத்தைப் படம்பிடித்து, அவற்றை அச்சிட்டு வெளியிடும்படியான கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
