;
Athirady Tamil News

கார் வெடி குண்டு தாக்குதலில் 14 பெண்கள் உள்பட 15 பேர் பலி!

0

சிரியாவின் வடக்கு மாகாணத்தில் கார் வெடி குண்டு தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரத்தில் நேற்று (பிப்.3) விவசாய தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் வெடி குண்டு வெடித்ததில் 14 பெண்கள் மற்றும் 1 ஆண் பலியாகினர். மேலும்,15 பெண்கள் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர்.

இருப்பினும், பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை கண்கானிப்பு அமைப்பு இந்த தாக்குதலில் 18 பெண்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.

முன்னதாக, கடந்த பிப்.1 அன்று மனிபிஜ் நகரத்தில் நிகழ்த்தப்பட்ட இதேப்போன்ற ஒரு கார் வெடி குண்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன் 9 பேர் படுகாயமடைந்தனர்.

துருக்கியின் ஆதாரவில் இயங்கி வரும் சிரிய தேசிய இராணுவப் பிரிவுகள் மற்றும் அமெரிக்க ஆதரவு குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் அந்நாட்டின் உள்நாட்டுப் போர் முடிவுப் பெற்ற பின்னரும் தொடர்வதினால் மன்பிஜ் நகரத்தில் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.