இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது
இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட14 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்று (09) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 இந்திய கடற்றொழிலாளர்களும் இரண்டு ட்ரோளர் படகுகளில் இழுவை மடியில் ஈடுபட்ட சமயம் கைது செய்யப்பட்டதோடு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்