;
Athirady Tamil News

பாடசாலைகள் தொடர்பில் அரசாங்கத்தின் தெளிவுபடுத்தல்

0

இன்று (14) பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடைபெறாது எனப் பரவும் உண்மைக்கு புறம்பான தகவல் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் வௌியிட்டதாக கூறப்படும், போலி கையொப்பத்துடன், போலியான கல்வி அமைச்சின் கடிதத் தலைப்பின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒரு கடிதம் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்வி வகுப்புகளும் இன்று (14) நடைபெறாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த கடிதம் போலியானது என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.