;
Athirady Tamil News

குடு ரொஷானின் மனைவிக்கு ஆயுள் தண்டனை

0

25 கிராமுக்கு அதிகளவான ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பெண்ணுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான 36 வயதுடைய விஜேசிங்க ஆராச்சிலாகே நிரோஷா என்ற பெண்ணுக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த பெண், மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடு ரொஷானின் மனைவி என்று கூறப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸார் நடத்திய சோதனையின் போது பிரதிவாதியான பெண்ணிடமிருந்து இந்த போதைப்பொருள் தொகை பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.