;
Athirady Tamil News

இ.போ.ச பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

0

கதிர்காமத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ் ஒன்று வீதியில் பயணித்த மூதாட்டி ஒருவர் மீது மோதியதில் மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு – பெரியமுல்லை பிரதேசத்தில் நேற்று (14) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் உயிரிழப்பு
விபத்தில், படுகாயமடைந்த மூதாட்டி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய மூதாட்டி ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை அடுத்து 50 வயதுடைய பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.