;
Athirady Tamil News

கொழும்பில் ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்த இளைஞர் மரணம்

0

கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31ஆவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அந்த ஹோட்டலின் ஒரு அறையில் தங்கியிருந்தவர் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இளைஞன் இறப்பதற்கு முன்பு எழுதிய ஒரு கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கடித்தில் ,

“அம்மா என்னை மன்னித்துவிடுங்கள், நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்… நான் எப்போதும் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உயிரிழந்த இளைஞன் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.