;
Athirady Tamil News

அமெரிக்காவுடன் இடைக்கால ஒப்பந்தம்: ஈரான் பரிசீலனை

0

அமெரிக்காவுடன் சனிக்கிழமை தொடங்கவிருக்கும் மறைமுக அணுசக்திப் பேச்சுவாா்த்தையின்போது, இரு தரப்பினருக்கும் இடையே இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது குறித்து விவாதிக்க தாங்கள் பரிசீலித்துவருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தை வல்லரசு நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-இல் மேற்கொண்டது. எனினும், பிறகு ஆட்சிக்கு வந்த டிரம்ப் அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினாா்.

இந்தச் சூழலில், அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள டிரம்ப், தங்களுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது இதுவரை இல்லாத மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தாா். அதையடுத்து ஓமன் உதவியுடன் இரு தரப்பினரும் மறைமுகப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.