பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 3 காவலர்கள் பலி, 16 பேர் காயம்!

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானின் மஸ்துங்கில் காவலர்கள் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 3 காவலர்கள் சம்பவ இடத்திலேய பலியாகினர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
பலுசிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்டின் கூற்றுப்படி,
டாஷ்ட் சாலையில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் வெடிகுண்டைக் காவலர் செல்லும் வாகனத்தின் அருகே பொருத்தப்பட்டிருந்தது. பலுசிஸ்தான் தேசியக் கட்சி போராட்டத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியில்
ஈடுபட காவலர்கள் ஆர்டிசி கலாட்டில் இருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த வெடிகுண்டு சம்பவம் நிகழ்த்தப்பட்டது.
இந்த குண்டுவெடிப்பில் காவலர்கள் மூவர் கொல்லப்பட்ட நிலையில், காயமடைந்த 16 பேரில் இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலத்த காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக குவெட்டாவிற்கு மாற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், மேலும் விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். தாக்குதலுக்குக் காரணமானவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.