;
Athirady Tamil News

கிளிநொச்சியில் அஞ்சல் வாக்கு அடையாளமிடப்படுவதை மேற்பார்வை செய்யும் உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் மற்றும் அலுவலர்களுக்கான செயலமர்வு

0

எதிர்வரும் மே மாதம் 06ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 24,25 மற்றும் 28,29 திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு நிலையங்களில் அஞ்சல் வாக்கு அடையாளமிடப்படுவதை மேற்பார்வை செய்யும் உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் மற்றும் அலுவலர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு இன்று(21) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் பி.ப 2.00 மணிக்கு நடைபெற்றது.

இதன்போது அஞ்சல் வாக்கு அடையாளமிடப்படுவதை மேற்பார்வை செய்யும் உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் மற்றும் அலுவலர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் வேலாயுதம் சிவராசா அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள், தபால் மூல வாக்களிப்பு நிலையங்களின் வலயங்களுக்கான உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்கள், அஞ்சல் வாக்கு அடையாளமிடப்படுவதை மேற்பார்வை செய்யும் அலுவலர்கள், தேர்தல்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.