;
Athirady Tamil News

யாழ் . போதனா முன் கஞ்சா வியாபாரம் – ஒருவர் கைது

0

யாழ் . போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

வைத்தியசாலை முன்றலில் கஞ்சா வியாபாரத்தில் ஒருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த நபரை கைது செய்து , சோதனையிட்ட போது , அவரது உடைமையில் இருந்து 25 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.