ராஜபக்சர்களின் கதிர்காம வீடு ; கைதானவருக்கு பிணை

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் உப தலைவர் எல். ஏ விமலரத்னவை பிணையில் விடுதலை செய்ய திஸ்ஸமஹாராமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜபக்ஷ குடும்பத்துக்கு சொந்தமாக கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள வீடொன்று தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் எல். ஏ விமலரத்ன குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று (29) கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.