கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

கொழும்பு – மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லுனாவ பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (02) இரவு மொரட்டுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
லுனாவ பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 02 கிலோ 50 கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.