;
Athirady Tamil News

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

0

நொச்சியாகம, அந்தரவெவ பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அந்தரவெவ பகுதியை சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.

குறித்த நபர் கடந்த 17ஆம் திகதி இரவு தனது வீட்டிற்கு அருகில் உள்ள கல் குவாரி குட்டை ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் அந்த கல் குவாரிக் குட்டையிலிருந்த மீன்பிடி வலையொன்றில் சிக்கியிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.