;
Athirady Tamil News

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

0

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதன்படி, ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை உப்பு இறக்குமதி செய்ய முடியும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனூடாக, தொழிற்சாலைகளுக்குத் தேவையான பதனிடப்படாத அயடின் கலக்காத உப்பு மற்றும் நுகர்வோருக்குத் தேவையான அயடின் கலந்த உப்பு ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.