;
Athirady Tamil News

மண் மேட்டின் கீழ் புதைந்த நபர் ; ஒரு மணி நேர போராட்டத்தின் பின் மீட்ட அதிகாரிகள்

0

ஒரு வீட்டின் அருகே உள்ள மதிலை தடுத்து சரிந்து விழுந்துகிடந்த மண் மேட்டை அகற்றிக் கொண்டிருந்த ஒருவர், மண்ணுக்குள் சிக்கி காயமடைந்த நபர், பத்திரமாய் மீட்கப்பட்ட சம்பவம், பதுளை, ஹாலிஎல, போகஹமதித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று (26) காலை சிக்கி காயமடைந்த நபர், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர்வாசிகள், பொலிஸ், தீயணைப்புப் படை, பதுளை போதனா மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் ஆகியோர் இணைந்து ஒரு மணி நேரமாக மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் பின்னர், அவர் காயமின்றி மீட்கப்பட்டு பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே இடிந்து விழுந்த மண் மேட்டை அகற்றி, பக்கவாட்டு சுவரை சரிசெய்ய முயன்றபோது, ​​இந்த நபரும் ஒரு குழுவும் இந்த விபத்தில் சிக்கினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.