தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள் மற்றும் பிராந்திய தொழில் முயற்சி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்ஸ்மன் அபயசேகர அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றைய தினம் (26.05.2025) காலை 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதில் யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் தேவைப்பாடுகள் சார் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது, குறிப்பாக அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி , சுற்றுலாத்துறை மேம்பாடு , தாழையடி குடிநீர்த்திட்டம் , தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள், வங்கிக் கடன் முறைமை ,தொழில் தேடுவோருக்கான வேலைத்திட்டங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து,
தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள் மற்றும் பிராந்திய தொழில் முயற்சி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் அரசாங்க அதிபர் தலைமையில் மு. ப 11.15 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை இனங்காணல்,நிதி சாா்ந்த விடயங்களை வங்கிகளுடன் கலந்துரையாடல் மற்றும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள் மற்றும் பிராந்திய தொழில் முயற்சி அபிவிருத்தி மேம்பாடு, ஏற்றுமதி , பல்கலைக்கழகங்களில் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குதல், பாடசாலைகளில் புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குதல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் பிரதிப்பணிப்பாளர் வசந்த சேனா நாயக்க உதவிப்பணிப்பாளர் சசிகதிமெல் மற்றும் குழுவினர் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், உதவி மாவட்ட செயலாளர் உ.தா்சினி, கைத்தொழில் அதிகார சபையின் மாகாணப்பணிப்பாளர் மற்றும் மாவட்ட உதவிப்பணிப்பாளர், மாவட்ட உதவி, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவின் உதவிப்பணிப்பாளர், வர்த்தக சம்மேளனத்தின் தலைவர், வங்கிகளின் பிரதிநிதிகள் , தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.